கடவுளில்லை கடவுளில்லை கடவுள் என்பதில்லையே !

காலுக்கு செருப்பும் மில்லை
கால் வயிற்றுக் கூழுக்கு வழியுமில்லை
பாழுக் குழைத்தோ மடா – என் தோழனே
பசையற்றுப் போனோமடா !

பாலின்றிப் பிள்ளை அழும்
பட்டினியால் தாயழுவாள்
வேலையின்றி நாமழுவோம் – என் தோழனே
வீடு முச்சூடும் அழும்.

ஒன்றுபட்டு போர் புரிந்தே
உயர்த்துவோம் செங்கொடியை
இன்றுடன் தீருமடா – என் தோழனே
இம்சை முறைகளெல்லாம்

கடவுளில்லை கடவுளில்லை
கடவுள் என்பதில்லையே !
உடலைக் கண்டதுண்டமாக்கி
ஊறு செய்த போதிலூம்
கடவுளில்லை கடவுளில்லை !

பச்சைக் குழ்ந்தைக்கு பாலுமிலை – அதன்
பட்டினியழுகை கேட்பதில்லை
இச்சையுடன் பாலைச் சாமிக்கென்றே
கல்லில் இட்டு வணங்குகின்றார்,
முக்திக்கென்றே !

கவி – ஜீவானந்தம்


Posted

in

by

Tags: