ஆத்தாடி மனசு தான் ரெக்க கட்டி பறக்குதே

பாடியவர்: கார்த்திக்ராஜா
இசை: யுவன் சங்கர் ராஜா
படம் : கழுகு 
வரிகள் : நா. முத்துக்குமார்

 

ஆத்தாடி மனசு தான் ரெக்க கட்டி பறக்குதே
ஆனாலும் வயசு தான் கிட்ட வரத் தயங்குதே
அக்கம் பக்கம் பாத்து பாத்து
ஆசையாக வீசும் காத்து
நெஞ்சுக்குள்ளே ஏதோ பேசுதே
அடடா இந்த மனசு தான்
சுத்திச் சுத்தி உன்னத் தேடுதே
அழகா இந்தக் கொலுசு தான்
தத்தித் தத்தி உன் பேர் சொல்லுதே

ஆத்தாடி மனசு தான் ரெக்க கட்டி பறக்குதே
ஆனாலும் வயசு தான் கிட்ட வரத் தயங்குதே

கிட்ட வந்து நீயும் பேசும் போது
கிட்டத்தட்ட கண்ணு வேர்த்துப் போகும்
மூச்சே காச்சலா மாறும்…ஓஹோ
விட்டு விட்டு உன்ன பாக்கும் போது
வெட்டி வெட்டி மின்னல் ஒண்ணு மோதும்
மனசே மார்கழி மாசம்
அருகில் உந்தன் வாசம்
இந்தக் காத்தில் வீசுது- விழி

தெருவில் போகும் உந்தன்
உருவம் தேடுது
பாவி நெஞ்ச என்ன செஞ்சே
உந்தன் பேர சொல்லிக் கொஞ்ச
அவளக் கொன்னாலும் அப்போதும்
உன் பேர சொல்வாளடா…

ஒண்ணா ரெண்டா என்ன நானும் சொல்ல
ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள
பேச தைரியம் இல்ல ஒஹோ
உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள
உள்ளம் அவள முட்டி முட்டித் தள்ள
இருந்தும் வெட்கத்தில் செல்ல
காலம் எல்லாம் அவள
பாத்தே வாழணும்
உயிர் போகும் நேரம் அவளின்
மடியில் சாய்ந்தே சாகணும்
ஒன்னத் தவிர என்ன வேணும்
வேற என்ன கேட்கத் தோணும்
நெஞ்சம் அவளோட வாழாம
மண்ணோடு சாயாதடா


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *