ஆருயிரே ஆருயிரே அன்பே

திரை படம் :- மதராசபட்டினம்
வரிகள்:- ந.முத்துக்குமார்
இசை :- G. V. பிரகாஷ்

 

ஆருயிரே ஆருயிரே அன்பே 
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையே நான் இல்லையே
நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்

உயிரேஎன் உயிரே எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
என் உயிர் நீயே என (ஆருயிரே )…

விழிதாண்டி போனாலும்
வருவேன் உன்னிடம் எங்கே நீ தொலைந்தாலும்
நெஞ்சில் உன் முகம்

காற்றினில் மாறனோ ஒ … ஒ …
சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும்போதும் வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பெனே

உயிரேஎன் உயிரே
உன்னிலே என்னுயிரே உனக்கும் என்னுயிரே
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னிலே உறைகிறேன் (ஆருயிரே )

கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்
கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம்
மேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ …
உன்னிலே என்னுயிரே நாமே ஓருயிரே
நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேனே ..


Posted

in

by

Tags: