இலங்கை பாராளுமன்றம் நாளை நள்ளிரவு கலைப்பு? ஜனாதிபதி அறிவிக்கிறார்?

இலங்கை பாராளுமன்றத்தை நாளை நள்ளிரவில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே கலைக்கக் கூடும் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்றார். இதையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை கோத்தபாய நியமித்தார்.

இந்நிலையில் இலங்கை பாராளுமன்றத்தின் பதவிக் காலம் மார்ச் 1-ந் தேதியுடன் நான்கரை ஆண்டுகள் நிறைவடைகிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கலைக்க பாராளுமன்றத்தில் மூன்றில் 2 பங்கு எம்.பி.க்கள் ஆதரவு வேண்டும் அல்லது நான்கரை ஆண்டுகள் முடிந்த நிலையில்தான் கலைக்கப்பட முடியும்.

இலங்கை பாராளுமன்றத்தை கலைப்பதற்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போதுமான ஆதரவை தரவில்லை. இந்நிலையில் இன்றுடன் பதவி காலம் நான்கரை ஆண்டுகள் நிறைவடைவதால் நாளை நள்ளிரவில் நாடாளுமன்றம் கலைக்கப்படக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ந் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெற்றது. அப்போது பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல நேரம் இல்லை? இதனிடையே இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான நல்ல நேரம் இல்லை என்பதால் ஓரிருநாட்கள் தாமதமாகும் எனவும் சில கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hot this week

Stock Market Operators யார்? அவர்கள் எப்படி பங்கின் விலையை Manipulate செய்கிறார்கள்?

“Stock Market Operator” என்பதன் பொருள் பங்குச் சந்தையில் பெரிய அளவில்...

இலங்கை பங்குச் சந்தை லேசான உயர்வில் முடிவு; வங்கி பங்குகளில் விற்பனை அழுத்தம்

இலங்கையின் கொழும்பு பங்குச் சந்தை (CSE) திங்கட்கிழமை சிறிய உயர்வுடன் வர்த்தகத்தை...

ஆடைத் துறை வருவாய் மேலும் மந்தமடையும்

இலங்கையின் முக்கிய ஆடை உற்பத்தியாளர்களான Teejay Lanka PLC (TJL) மற்றும்...

லாபத்தை உறுதி செய்யும் “Sell Rules”

பங்கு சந்தையில் பலர் எப்போது வாங்குவது? என்று கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையான...

இலங்கை பங்குச் சந்தையில் முதலீடு எப்படி தொடங்குவது?

இன்றைய காலத்தில் செல்வத்தை (wealth) உருவாக்க மிகவும் சக்திவாய்ந்த வழிகளில் ஒன்று...

Topics

Stock Market Operators யார்? அவர்கள் எப்படி பங்கின் விலையை Manipulate செய்கிறார்கள்?

“Stock Market Operator” என்பதன் பொருள் பங்குச் சந்தையில் பெரிய அளவில்...

இலங்கை பங்குச் சந்தை லேசான உயர்வில் முடிவு; வங்கி பங்குகளில் விற்பனை அழுத்தம்

இலங்கையின் கொழும்பு பங்குச் சந்தை (CSE) திங்கட்கிழமை சிறிய உயர்வுடன் வர்த்தகத்தை...

ஆடைத் துறை வருவாய் மேலும் மந்தமடையும்

இலங்கையின் முக்கிய ஆடை உற்பத்தியாளர்களான Teejay Lanka PLC (TJL) மற்றும்...

லாபத்தை உறுதி செய்யும் “Sell Rules”

பங்கு சந்தையில் பலர் எப்போது வாங்குவது? என்று கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையான...

இலங்கை பங்குச் சந்தையில் முதலீடு எப்படி தொடங்குவது?

இன்றைய காலத்தில் செல்வத்தை (wealth) உருவாக்க மிகவும் சக்திவாய்ந்த வழிகளில் ஒன்று...

பொருளாதார நிலைத்தன்மையை பாதுகாக்க வேண்டும்: இலங்கைக்கு IMF அறிவுரை

இலங்கை பொருளாதாரத்தின் மீளுருவாக்கப் பயணத்தில் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சர்வதேச...

சார்லி மங்கர்: பங்கு வாங்கும் முன் பயன்படுத்திய 17 சரிபார்ப்பு பட்டியல்

பங்கு முதலீட்டின் உலகில், Charlie Munger ஒரு சாதாரண முதலீட்டாளர் அல்ல....

கொழும்பு பங்குச் சந்தை: ASPI உயர்வு – S&P SL20 சரிவு

இன்றைய வர்த்தக நாளில் கொழும்பு பங்குச் சந்தை (CSE) கலவையான செயல்பாட்டை...

Related Articles

Popular Categories