Month: January 2011

  • துன்பத்தையும் மகிழ்ச்சியாக்குவோமே!

     விலங்குகள் எப்படி வாழ வேண்டுமென்ற தன்மையை இயற்கை நிர்ணயம் செய்திருக்கிறது. அவை அந்த வாழ்க்கை நிலையிலிருந்து சற்றும் மாறுபட்டு வாழ்வதில்லை. ஆனால், மனிதர்களுக்கோ இப்படித்தான் வாழ வேண்டுமென்ற வரைமுறை எதுவும் வகுக்கப்படவில்லை. அவர்கள் விருப்பம்போல வாழ்ந்து கொள்ளும்படியாக சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தங்களது சுதந்திரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல், அதனை போராட்டமாக உருவாக்கிக் கொள்கிறார்கள். இதனால் பல இழப்புகளை சந்திக்கின்றனர். தங்களுக்கென தரப்பட்டுள்ள சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை முறைப்படுத்திக்கொள்ள வேண்டும். அன்பு, அறிவு, பணம், இன்பம்…